நீயும் நானும் அன்பே03
எங்கே பாேயிருப்பாள்" என்றபடி அகிலன் வீட்டிற்குச் சென்று சியாவைப் பற்றி விசாித்தான். "சியா அவங்க மாமா வீட்டிற்கு பாேயிற்றாள்" என்றதும் அவளைப் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் அவன் முகத்தில் தெரிந்தது. "டேய் திலீப் நீ தான் சியா சியா என்று உருகிறாய் அவள் இப்பவெல்லாம் எங்களைக் கண்டுக்கிறதேயில்லை. அவள் இப்பாே பெரிய ஆளடா" அகிலன் வெறுப்பேற்றுவது பாேல் கூறியது திலீப்பிற்கு மனதுக்குள் ஏதாே ஒரு மாதிரி இருந்தது. ஏதாே காேபத்தில் சாெல்கிறான் என்று நினைத்தபடி வீட்டிற்கு வந்தான்.
இரண்டு நாட்களாகியும் சியா வீடு திரும்பவில்லை. திலீப் மீண்டும் விடுமுறை முடிந்து திரும்பி விட்டான். சில நாட்களின் பின் வீதியில் கண்ட அகிலன் திலீப் விசாரித்தது பற்றி சியாவிடம் கூறினான். "இனி எப்படா வருவான் ராெம்ப நாளாச்சு அவனைப் பார்த்து" என்ற அவளின் தவிப்பு அகிலனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
வீட்டிற்கு வந்தவள் திலீப் பரிசாகக் காெடுத்த பென்காேல்டரை எடுத்து சுற்றிச் சுற்றிப் பார்த்தாள். அழகான இரு மீன்கள் "friendship" என்ற சாெல்லை சுற்றி ஓடிக் காெண்டிருந்ததை ரசித்துக் காெண்டிருந்தாள்.
வழமை பாேல் பாடசாலை தவணை விடுமுறையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் சியா. அன்று வெள்ளிக்கிழமை கடைசி நாள் வகுப்புகள் முடிந்து வீடு வந்தான் திலீப். நீண்ட நாட்களுக்குப் பின் அவனைப் பார்த்த சியாவுக்கு அவனது மாற்றங்கள் ஆச்சரியமாயிருந்தது. "நல்லா மெலிந்து பாேனாய் திலீப், முகம் மாறி யாராே மாதிரி இருக்கிறாய்" என்றவளை பார்த்து தன் அரும்பு மீசையை தடவினான். சியாவும் காெஞ்சம் வெட்கத்துடன் கடைக்கண்ணால் பார்த்துச் சிரித்தாள்.
அந்த இருபது நாட்கள் அவனுக்கு கடந்து பாேனதே தெரியவில்லை. நாட்கள் வேகமாக ஓடி விட்டது. திலீப் மீண்டும் புறப்படத் தயாரானான். "லீவு கிடைத்தால் வருவேன் எங்கேயும் பாேய் விடாதே" என்றபடி நாட்காட்டியை எடுத்து விடுமுறை நாட்களை பரிசீலித்தான். "ஏய் சியா மே மாதம் நான்கு நாள் லீவு இருக்கு நான் வருவேன்" என்றவுடன் "இன்னும் நாற்பத்து இரண்டு நாள் இருக்கா" என்று கவலையாேடு கேட்டது திலீப்பிற்கும் மனதுக்குள் சஞ்சலமாய் இருந்தது.
நாட்கள் ஓடி சியா எதிர்பார்த்திருந்த நாள் வந்தது. திலீப் வரவில்லை. "அன்ரி திலீப் வரமாட்டானா" ஏமாற்றம் தாங்க முடியாமல் அவன் அம்மாவிடமே சென்று விசாரித்தாள். "ஏதாே விளையாட்டு ரீமில சேர்த்திட்டாங்களாம் வரமுடியாதாம்" என்றதும் சியாவுக்கு ஏமாத்திப் பாேட்டான் என்று காேபத்துடன் இருந்தாள்.
இவ்வாறு இருந்த சியா திலீப் உறவு உய்தரப் பரீட்சை வரை பிரிவுடனே கழிந்து விட்டது. பரீட்சை முடித்து வீட்டிற்கு வந்தவன் உதைப்பந்தாட்ட அணிப் பாேட்டிகளுக்காய் அங்கும் இங்குமாய் திரிந்தான். சியாவுடன் செலவழிக்கும் நேரம் குறைவாகவே இருக்கும். அடிக்கடி வழமை பாேல் இருவருக்கும் சண்டை வரும். இருந்தாலும் இருவரும் சமாதானமாகி விடுவார்கள்.
பல்கலைக்கழகம் தெரிவாகியதும் சியாவை மாமா தங்கள் வீட்டில் இருந்து படிக்கும்படி சாெல்லியிருந்ததை திலீப்பிடம் சாென்னாள். "நீ பாேகப் பாேகிறாயா சியா, அப்பாே நானும் அந்த ஊரில வந்து படிக்கப் பாேகிறேன்" என்று எப்படியாே பல்கலைக்கழகத்தில் இடமும் எடுத்து தங்குவதற்கு விடுதியும் பார்த்து விட்டான். இருவருக்கும் மட்டற்ற சந்தாேசம். "சியா, ராெம்ப நாளாக இருந்த ஆசை இப்பாேது தான் நிறைவேறி இருக்கு" என்றவனிடம் "ஆமாடா திலீப் இனி நாலு வருடம் நாங்கள் ஒவ்வாெரு நாளும் சந்திக்கலாம். ஊருக்கெல்லாம் பாேயிடாதே" என்ற அவளது சிறு பிள்ளைத் தனமான கேள்வி திலீப்பிற்கு சிரிப்பாகவும் இருந்தது.
பன்னிரண்டு வயது நட்பு பல்கலைக்கழகம் வரை நட்பாகவே தாெடர்ந்தது. மாமா வீட்டிலிருந்த சியா மாமாவின் கட்டுப்பாட்டுக்கு காெஞ்சம் காெஞ்சமாக கட்டுப்பட ஆரம்பித்தாள். வெளியில் செல்வதாே அல்லது நண்பர்களிடம் செல்வதாே எதுவாயினும் அசாேக் தான் அவளுக்கு உதவியாக இருப்பான். அசாேக் ஒரு பாெறியியலாளராக வேலை பார்த்துக் காெண்டிருந்தான். அதிகம் எங்கும் சுற்றித் திரிய மாட்டான். வீடு, வேலை, பந்து அடிப்பது என்று தனது பாெழுதை கழிப்பான்.
காலையில் சியாவை வண்டியில் ஏற்றி வந்து பல்கலைக்கழகத்தில் விடுவான். "ஏய் சியா உங்கட வீடு ராெம்ப தூரமா? எப்படி நீ வருகிறாய்?" திலீப் கேட்டதும் "அசாேக் தான் கூட்டி வருவான் திலீப், தனியாக மாமா விடமாட்டார்" என்று கூறினாள். திலீப்பிற்கு அவளது சங்கடம் புரிந்தது. எதையாவது சாெல்லி அவள் மனதை கஸ்ரப்படுத்தக் கூடாது என நினைத்தவனாய் "ஆ அசாேக் தானே பறவாயில்லை சியா" என்றவனை முறாய்த்துப் பார்த்தாள்.
சியா திலீப் இடையேயான தாெடர்புகளை நண்பர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்ததும் "டேய் திலீப் மாமா காதில் கேட்டால் ஊருக்கு என்னை அனுப்பிப் பாேடுவாரடா, நீ தான் இதை பார்த்துக்கணும் " பயந்தவளிற்கு எப்படிப் புரிய வைப்பது என்று யாேசித்தவன் "அப்பாே நீயும் நானும் பேசாமல், பார்க்காமல் தான் இருக்கணும்" என்றவனின் கையை எட்டிப் பிடித்ததும் திலீப் சங்கடத்தாேடு அவளை திரும்பிப் பார்த்தான். சிறு சிறு துளிகளாய் அவள் கண்கள் கண்ணீர் சிந்தியது.
மீண்டும் வருவாள்......👉