கல்லறை உறைந்த காதலும் உயிர்க்கும்
இளவேணில் இலையுதிர்வு
வசந்தத்தின் நினைவுகளை உயிர்த்துக் கொண்டே இருக்கிறது ......
நீ இல்லாது கரையும் பொழுதுகள்
நேசத்தின் வாசத்தை சுவாசத்தில் பொதிந்துவிட்டுச் செல்கிறது...
கல்லாகிக் காலடிக்காய் காத்திருந்த அகலிகை மனம்
உனைத் தேடலில் ஆர்பப்பரித்து ஆர்ப்பரித்து அடங்குகிறது.....
காதல் வெறும் உணர்வுதான் ....
சொல்பவர்கள் சொல்லட்டும்...
கருவிழி நுகர்வதை நேசிப்போர்
காற்றை உணர்ந்து சுவாசிப்போர்
உயிர்வழி மொழியை இசைப்போர்
கல்லறை உறைந்தக் காதலையும் உயிர்ப்பிப்பர்....