ஆச்சரிக்கும் நிறத்தில்

அலங்காரம் பண்ணுவதற்கே
அதிகமான நேரம் வேணும் வேணும்
அரிதாரம் பூசுவதைப் போல்
அங்கமெல்லாம் மாவைப் பூசி
அடர்மிகுந்த கருப்பு நிறத்தை
ஆச்சரிக்கும் நிறத்தில் மாற்றி
அறிவியலின் துணையைச் சார்ந்தே
அணி மணிகளை எழிலாய் செய்து
அதனின் உதவியைக் கொண்டு
ஆடம்பரமாய் வாழ்தல் போலே
அகில உலகத்தார் மிரளும் வண்ணம்
அனுதினமும் போக்குக் காட்டி
அறிவுக்கு ஒவ்வா முறையில்
அத்தனைச் செயலும் பொய்யாய்
அரங்கேறச் செய்யும் தொனியில்
அகிலத்தார் உள்ளனர் இன்று
அத்தகையோர் இனத்தைக் கண்டு
அவர்களிடமிருந்து விலகிக் கொண்டு
அழகு வாழ்வை நடத்தத் துணிந்தால்
அல்லல் இல்லை வாழ்வில் என்றும்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (4-Mar-20, 9:27 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 1316

மேலே