கொரோனா

கொரோனா கொரோனா அறிவாய் மனிதா
இது ஓர் கண்ணுக்கு புலப்படா உயிர்க்கொல்லி
மண் நீர் காற்று இவற்றை ஊடுருவி மனிதரை
ஒத்துமொட்டமாய்த் தாக்கும் உயிர்க்கொல்லி
எங்கிருந்து வந்தது ஏன் வந்தது என்று
ஒன்றுமே உருப்படியாய் தெரியும் முன்னே
ஆயிரம் ஆயிரமாய் மக்களைத் தாக்க
கண்டங்கள் தோறும் திக்கு முக்காடிப்போயினரே
மருத்துவரும் விஞானிகளும் ……. அன்று
வைசூரியும் பழகும் காலராவும் இவ்வாறே
மனித குலத்தைத் தாக்கி ஆயிரக்கணக்கில் மாய்க்க
அன்று மயக்கத்தில் இருந்த இலக்குவனனையும்
வானர சைனியத்தையும் காத்திட 'சஞ்சீவி' தேடி
அலைந்து கண்டும் எடுத்து வந்து இவ்ரகளுக்கெல்லாம்
உயிர் தந்து பிழைக்கவைத்த வாயு மைந்தன் அனுமன் போல்
இன்று கொரோனா தாக்கி அல்லலுறும் மனித இனத்தை
மாருதியே மீண்டும் சஞ்சீவி தாங்கி வரமாட்டாயோ
மனித ரூபத்தில் விஞானியாய், மருத்துவராய் …….

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Mar-20, 1:30 pm)
பார்வை : 101

மேலே