இறந்திருப்பேனா

பிறந்தபோது
உன்னை அறிந்தவனில்லை,
வாழும்போது
உன்னை அறியாமலில்லை,
முடியும்போது
உன்னை நினைக்காமல்
இருந்ததில்லை,
முடிவில் என்னை
மறந்தது நீயன்றோ !
இல்லையென்றால் நான்
இறந்திருப்பேனா !

எழுதியவர் : கோ. கணபதி. (29-Mar-20, 7:04 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 51

மேலே