ஒழிப்போம் கொரோனாவை -

-------------------------------------------------

ஏனிந்த நிலையின்று நமக்கு
பறவைகள் பாடித் திரிகின்றன
வசிக்கும் கூடுகளோ திறந்தபடி ....

மனித இனத்தைக் காணவில்லை
வெறிச்சோடிய காட்சி சாலையில்
இல்லங்கள் திறக்காத நிலையில் !

பிராணிகள் பீதியின்றி உலவுகின்றன
மனிதனோ முடங்கிக் கிடக்கின்றான்
இயங்கிட இயலாமல் இருக்கின்றான் !

இயற்கை போதிக்கும் பாடமா
விபரீத விளையாட்டின் விளைவா
சாதிமத வெறிக்கு சவுக்கடியா !

கட்டுப்பாடு தட்டுப்பாடு படும்பாடு
அடித்தட்டு மக்களுக்கு பெரும்பாடு
அனைத்துத் தரப்பிற்கும் குறைபாடு

ஒத்துழைப்பே இன்றைய நிலைப்பாடு !
ஒழிப்போம் கொரோனாவை உறுதியோடு
குறைவின்றி வாழ்வோம் மகிழ்வோடு !

பழனி குமார்
29.03.2020

எழுதியவர் : பழனி குமார் (29-Mar-20, 9:51 pm)
பார்வை : 178

மேலே