புதிய உலகம் செய்வோம்

நம் குலம் மானிட குலம் நாம்
எல்லாம் இந்நாட்டவர் அந்நாட்டவர்
என்றில்லாமல் நாமெல்லாம் உலக மக்கள்
நம்மைப் படைத்த தேவனும் ஒருவனே
நம்மில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் யாருமிலர்
என்ற எண்ணத்தில் வாழ்ந்திட துவங்கினால்
நம்முள் போர் எது போரிடுவார் யார்
என்றும் எப்போதும் அமைதி நிலவும்
இப்புண்ணிய பூமியில் தேவர்போல் வாழ்ந்திடலாம்
'மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம்'
என்ற கவியரசின் வாக்கும் பொய்யாகாதே
இப்படி நாமே நமக்காக உண்டுபண்ண
நம்முலகத்தில் வாழ்ந்திட்டால் …..
வாழ்வோமா நாளைய சமுதாயமே சொல்லுங்கள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாயு (1-Apr-20, 11:37 am)
பார்வை : 107

மேலே