உயிர்க் கொல்லி கொரோனாவே

கவிதை: உயிர்க் கொல்லி கொரோனாவே

வே.ம.அருச்சுணன்



உயிர்க்கொல்லி கொரோனாவே ஏன்வந்தாய்?

ஊரையழிப் பதுனக்கு சுகம்தருமா

மயிர்க்கூச் செரியும் சம்பவங்களால்

மாண்டோர் எண்ணிக்கை அறிவாயோ?



பொறுப்பற்ற அற்பர்களின் செயல்தனிலே

போர்தனில் வீழ்வதுபோல் அழிகின்றாரே

மறுப்பேதும் கூறாமலே மாள்கின்றாரே

மாமணியாய்ப் பிறந்ததன் பயன்யாது?



உன்பொல்லா குணத்தாலே உலகமினி

உருப்படியாய் இருக்காதென மனிதகுலமும்

நன்றேயினி வாழ்தலும் இயலாதென்றே

நாதியற்றே மடிதல்தகுமா கொரோனாவே...?



உண்மையாய் உனைத்தீர்த்திட கூடுகின்றார்

உறுதிபடவே கூறுகின்றார் நனிசிறந்த

கண்ணான மருந்தாலே உனைவீழ்த்த

ஊக்கமுடனே இளையோரே எழுகின்றார்....!

எழுதியவர் : கவிஞர் வே.ம.அருச்சுணன் (1-Apr-20, 10:58 am)
சேர்த்தது : வேமஅருச்சுணன்
பார்வை : 576

மேலே