அன்பு மகன் - 3

அன்பு மகன் - 3

என்சாயல் கள்தீட்டிய
குழவிப்பரு வமவன்
என்பிரதிபிம்பத்தில் அவன்சாயல்பூசும்
பிள்ளைபருவ விந்தைக்காரன்!

காலமென்னும் தோட்டாக்கள்
துளைத்த காயங்கள்
மறைந்துதான் போகின்றன
இவன் புன்னகையில் ...

மெல்லிசைக்கும் பச்சியெல்லாம்
வல்லை இன்னிசையில்
மழைபோல் நனைகின்றன
இவன் பாடுகையில்...

மின்மினி பேதைகூட்டம்
கொஞ்சி விளையாடும்
விண்மீன் தோட்டம்
இவன் கண்சிமிட்டலில்...

வல்லினங்கள் நாவினில் நடைபயிலும்
மெல்லினங்கள் சற்றே மயங்கியெழும்
இடையினங்கள் இடையிடையே துள்ளியெழும்
இவன் தமிழ்பேச்சினில்...

மெல்லமெல்ல நவரசங்களை
நாடக மேடையேற்றி
சொல்லிசொல்லி வேண்டியதை
பெறும்மாயக் கண்ணன்...

எழுதியவர் : ச. செந்தில் குமார் (1-Apr-20, 3:39 pm)
சேர்த்தது : ச செந்தில் குமார்
பார்வை : 9836

மேலே