விதி
ஒட்டுமென்றதும் உறவுகொண்டவர் ஒடுவாரவர்
தொட்டுப்பார்க்கவும் துணிச்சலின்றியே விட்டுமாறுவர்
எட்டிப்பார்க்கவும் இதயமின்றியே ஏங்கிடாரவர்
கட்டிக்காத்தவர் கடைசிவார்த்தையை காதிடாதவர்
விட்டுநீங்கிட விதியழைத்ததும் விம்மிடாதவர்
கொட்டும்நீரிலும் கொரோனாவுண்டெனக் கூவுவாரவர்
நோயுடல்
புசித்திடும் நெருப்பதன் பசிக்கென
ருசித்திடும் உணவென விருப்பது விதியே!