யோகிக்குக் கடிதம்

யோகிக்குக் கடிதம்

யோகிக்குக் கடிதம்


திரு சிவக் குமார் அவர்களுக்கு வணக்கம்.

நான் காவல் துறையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணிசெய்து மதுரை
மாநகரில் ஓய்வு பெற்ற ஆண்டு 2005. நான் 2005 மே மாதம் 28 தேதி மதுரை மாநகர
வானொலி நிலையத்தில் சித்தர்கள் யார் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினேன்.நான்
எழுதிய புத்தகங்கள் 1.The Bowl of Nectar. 2.Who is Siddha 3 chared Red Flower( Naxalite
operations in Tamil Nadu) தமிழில் 1.கருகிய செம்மலர்கள் (நாக்ஸல் ) 2 தமிழ் காக்கப்
புறப்படு. 3. திருக்குறள் ஒரு சமய நூல் மற்றும் அரவாணியும் ஆயிரம் வீரர்களும்.. சில
மாதங்களுக்கு முன் உங்களுடைய வீடியோபேச்சு கடவுள் பக்தி ஆகிய வற்றில்
ஒருசுதந்திர போக்கையும் முரட்டுத்தனதையும் பார்த்தேன் வியந்தேன். நீங்கள் இந்து
மதத்தை பற்றி பேசுவதால் எனக்கு ஓர்ஈர்ப்பு உண்டானது. இந்து மதம் இந்தியரின்
மதம் சைவ மத்த்தின் கூரானஅறுவகை மதங்கள் கொண்ட மதம். மற்ற மதங்கள் பிற்கால
மதங்கள். உலகம் இந்தியரின் மதத்தை அழிக்கப்பல விதத்திலும் முயற்சிக்கிறது.
எங்கும் வெளிநாட்டவர் மதகூட்டம் விவாதம் என்று இந்துமதம் பின்னுக்குத் தள்ளப்
பட்டு வருகிறது. இந்த சமயத்தில் நீங்கள் நடத்தும்மதக்கூட்டம் எனக்கு சமாதானமாகப்
படுகிறது.

சமாதி யுணர்ந்தக்கால் தக்கரிஷி என்பார்.
பெமாதி குளிகைசெய்தா டினவனே சித்தன்
புமாதித்த மூச்சை யடக்கினோன் யோகியாவான்
அமாதித்த இம்மூன்றும் அறிந்தோனே ஞானியாமே .......... திருமூலர்


1982--1984 வரை தர்மபுரியில் ஆய்வாளராக பணிபுரிந்த சமயம் பல முக்கிய ஜோதிடப்
புத்தகங்களைப் படித்தேன். பிறகு திருவண்ணா மலையில் 1984 முதல் 1992 வரை
பக்தியுடன் பணி. 1987 இல் அகத்தியர் பரிபூரணம் 1500 எனும் நூலைப் படிக்க நேர்ந்தது.
அதில் தம்பன ரசக் குளிகை செய்ய நிஜமான விந்துவிட்டு செய் என்று எழுதி இருந்தது
அது எனக்கு குழப்பமான சந்தேகத்தைக் கிளப்பியது. அந்தசமயம் சுமார் 8 மாதத்திற்கு
போளூரில் தற்காலிகப் பணியில் இருந்தேன். அகரம் அடுத்த குன்னத்தூர் மலையில்
ஒரு ஜடா முடிச்சாமியார் இருந்தார். அவர் மலைமீது பல சாமியார்களுக்கு காலையில்
தோசை அல்லது இட்டிலி வார்த்துக் கொடுப்பார். நான் அந்த சாமியாரை அணுகி என்
சந்தேகத்தைக் கேட்டேன். மனிதரின் விந்துவை சேர்த்து தான் ரச குளிகை செய்ய
வேண்டும் என்றார். நான் சிறிது நேரம் அங்கேயே இருந்தேன். அப்போது வேறு ஒரு
சாமியார், அங்கு சாப்பிடவந்தவர் என்னை அழைக்க நான் அவர் அருகில் சென்றேன்.
அவர் என்னிடம் இந்த சாமியாருக்கு நீங்கள் கேட்கும் விஷயங்கள் தெரியாது. எனவே
திருவண்ணாமலை கோயில் மண்டபத்தில் ஞான வெட்டியான் என்ற நூல்
விற்கிறார்கள் அதை வாங்கிப் படியுங்கள் உங்களுக்கு எல்லாம் புரியும் என்றார்.

நானும் தி. மலை கோயில் வெளிமண்டபத் தில் புத்தகம் விற்கும் மணி என்பவரிடம்
100 ரூபாய் கொடுத்து 1987 இல் வாங்கிப் படித்தேன். சுமார்1000 தடவையாவது அதைப்
படித்திருப்பேன். ஞான வெட்டியான் பாடல்களின் அடியில் கொடுக்கப்பட்ட
விளக்கவரிகளை நாள் ஒருபோதும் படித்ததில்லை. காரணம் படிப்போருக்கு புரியாது.
மற்ற யோக வைத்திய நூல்களுக்கும் விளக்கம் யாரும் எழுதியதில்லை. பல சித்தர்களின்
புத்தகங்களையும் பல வருடங்களாக நான் படிக்க விளக்கஙகளை எளிதில் அறிய முடிந்தது.
திருவள்ளுவரின் நூல்களான 1. நவரத்தின வைத்தியசிந்தாமணி 800 (2) காயகற்ப
நூல் 300 (3) பஞ்சரெத்தினம் 500 (4) ஏணி ஏற்றம் (5) முப்பூ சூஸ்திரம் (6) முப்பூ குரு
(7) கெவுன மணி (8) நாதாந்த திறவுகோல் 97( 9) முப்பு (10) திருவள்ளுவர் சோதிடம்
போன்ற நூல்கள் வாங்கிப் படித்தேன் இது தவிர சட்டை முனி வாத காவியம் சட்டைமுனி
நிகண்டு புலஸ்தியர் கற்பம் ரோமரிஷி 100ரோம ரிஷி 500 மச்சமுனி 500 போகர்
அருளிய வைத்தியம் 700 நான் 1991 இல் ஒருவரிடம் விலைக்கு வாங்கிய போகரின் 7000
ஒளவை குறள் 310 பதினென் சித்தர்களின் பெரிய கோர்வைபதினெண் சித்தர்
வைத்திய திறவுகோல் சில்லறை கோர்வை கருவூரார் வாதத்திரட்டு யூகிமுனி
வாதம். புலிப்பாணி வைத்தியம் அகத்தியரின்பஞ்சபட்ஷி சாஸ்திரம் யாக்கோபு என்கிற
ராமதேவனின் சிவயோகம் சிவ வாக்கியர் 1000 அகத்தியரின் பரிபாஷை ,500
அகத்தியர் முப்பூ சூஸ்திரம் அகத்தியர் முப்பூ குரு நூல். அகத்தியர் தீட்சாவிதி 216
அகத்தியர் ஞான காவியம் 1500 அகத்தியரின் கற்ப நூல் 1500 அகத்தியரின் சௌமிய
சாகரம் அகத்தியர் கன்ம காண்டம் அகத்தியர் வைத்திய நூல் அறிமுகம் கரூரார திரட்டு
அகத்தியர் மதி வெண்பா 100 கோரக்கர் நமன்ஆசான் திறவுகோல் மற்றும் மேகலை; .
நந்தீசர் நிகண்டு 100 நந்தீசர் கருக்கிடை 100. திருமூலர் வைத்திய சொல்வாகடம் 600
இன்னும் சில சில

நான் இதுவரை எந்த சாமியார்களின் காலில் விழுந்ததில்லை.. அவர் யாராயிரு ப்பினும்
அமானுஷ்ய சக்தி இருப்பவராயினும் (அருள் வாக்கு சொல்பவர்:) மாறாக நான்
திருவண்ணாமலையில் வெகு சாமியார்களிடம் விவாதம் செய்து அவர்களது தரத்தை
வெளிப்படுத்தி யிருக்கிறேன்.திருவண்ணாமலையில் சீஷானந்த சுவாமி என்ற ஒரு
ரிடையர்டு என்ஜினீயர் ரமணர் மடத்திற்கு அருகில் தனக்கென வீடு கட்டிக்கொண்டு
தங்கி சுமார் 30 வருடங்களாக தியானம் செய்து வந்தார் . நான் அவரை சந்தித்தது
1990 வருடம்..அவர் என்னிடம் சொன்னது ரமனரிஷியின் கண்ணில் ஒரு ஒளி கண்டேன்.
அன்றிலிருந்து அவரின் சிஷயனானேன் என்றார். நான் அவரைக் கேட்டது நீங்கள் காய
கற்பம் செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா ? காயகற்ப மருந்தை சாப்பிடத்தான் இடகலை
பிங்கலை மற்றும் சுழுமுனையை கட்டுப் படுத்த முடியு மென்றேன். என்னைப் பார்த்து
அவர் தியானத்தில் ஆழ்ந்து மூச்சு விட ஆரம்பித்தார் அது ராஜா நாகத்தின் பெரூச்சாக
அவர் முழங்காலில் பட்டது. யாரும் அதைபார்க்க மிரண்டு போயிருப்பார்கள். பிறகு கண்விழித்து
என்னைப் பார்த்தார். தான் காய கற்பம் சாப்பிட்டதில்லை என்று சொல்லி நீங்கள்
பழனி கிடையாது பழனி சுவாமி என்றார். இதேபோல் தஷ்சினாமூர்த்தி மடத்தில் வடநாட்டு
சாமியாரிடம் (அம்ஸா என்பவர் =அன்னப்பறவை) மூலிகைகளை திருமூலர் சொல்படி
எப்படி கருப்பாக்குவதுஎன்று விளக்க அதிசயித்துப் போனார். இப்படி சித்தர்களின் 25
துறையின் வெற்றியைக் கேள்விப்படாதவரே பக்தி யோகம் என்று சொல்லித் திரிகிறார்கள்.

நான் வேலூர் ஊரிசு கிருத்துவப்பள்ளியில் 1963இல் ,11ஆம் வகுப்பு வரைபடித்ததால்
பைபிளை படித்து அதில் பரிசும் வாங்கியுள்ளேன்.அப்பள்ளியில் கிருத்துவ ஆசிரியர்கள்
இந்துமத கடவுள்களை தூற்றிப் பேசுவார்கள்.அறியா வயதில் அவர்களை மறுத்து
பேசியது கிடையாது. 2003.இல் நான் திருக்குரானைப் படித்துள்ளேன். ஹதீஸ்களில்
சிலதைப் படித்துள்ளேன். பழைய புதிய ஏற்பாடுகள் அனைத்து மத்துப்படி எனக்கு.
கர்த்தரின் கூப்பாடு என்னவென்றால்.,
" நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து எதிரிகளை இரும்புக்கரத்தால் ஒடுக்கி
உங்களை தேனும் பாலும் ஓடுகின்ற இடத்தைக் காட்டினேன். ஆனால் நீங்கள் பாகால்
தெய்வங் களையும் தோப்பு விக்கிரங்களையும் வணங்கு கிறீர்கள் " என்று ஒப்பாரி
வைக்கிறார் . எனக்கு சப்பை மாடுகளையும் நொண்டி மாடுகளையும் பலிகொடுக்கிறீர்கள்
என்று குறை சொல்லுகிறார்.ஞானம் என்பது துளியும் பைபிளில் இல்லை. அதேபோல
முஸ்லீம் வேதத்தில் அதிகமாகக் காணப்படுவது ஏசுவை மறைமுகமாக தாக்கும்
வசனங்களே அதிகம்.. காரணம் யேசு மனிதன் கடவுள் கிடையாது என்று வலியுறுத்துகிறது.
முஸ்லீம் மத நோக்கமே கிருத்துவத்தை அழிப்பது. அது இந்தியாவில் நுழைந்துவிட இந்து
மதத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. ஒண்ட வந்தப் பிடாரி ஊர்ப் பிடாரியை ஒட்டிய
கதையாகி விட்டது. என்னிடம் இந்து சமயத்தை யாரும் தாக்கிப் பேச அவரை உண்டு
இல்லை என்று புரட்டுவது . என்னுடைய வாடிக்கையாகி போனது.

இந்த லட்சணத்தில் பின்விளைவுப் புரியாமல் இந்தியாவில் உள்ளசில இந்து முட்டாள்கள்
பேசும் முதல் வார்த்தை நான் இந்து இல்லை ஜாதி கூடாது . ஜாதியை விடுங்கள். என்கிறார்.
பக்தியும் வேண்டாம் என்கிறான். மதமும் வேண்டாமாம். பிறகு அவனுக்கு எதற்கு நாடு.
வெளியேறிஜாதி மத மில்லா நாட்டிற்கு போகலாமே. குடம் பாலில் துளி விஷமாகத்
திரிகிறார்கள். வெகு ஜனங்களின் ஒற்றுமையைக் குலைத்து பக்தி கலாசாரம் நல்லொழுக்கம்
ஈதல் அறத்துடன் பொருளீட்டல் நல்ல இல்லறத்தையும் தாக்கிச் சிரித்துப் பேசிப் பேசி
தமிழ் நாட்டினை நாரடித்து விட்டார்கள்
இவன் வெளிநாட்டில் இருந்தால் வாழ விடுவார்களா ? இவர் ஒட்டுவர். வெகுளிபொல்
நடிக்கும் இந்தியத் தமிழர்கள் நாட்டிற்கு தேவைதானா ? மதப்பற்று கிடையாது , நாட்டுப்பற்று
கிடையாது இந்துக் கோயில் பற்று கிடையாது, தமிழ் பேசுவான் தமிழ் இலக்கியம்
படிக்கவில்லை தேவை யில்லை. தினமும் சிரிக்க வேண்டும் ஓசி சோறு வேண்டும்.
இப்படித்தான் தமிழர் கலாசாரம் மாறிப்போனது. இதை யார் வந்து மாற்றுவது?அந்த
பரமாத்மா தான் வந்து சொல்லவேண்டும். உங்களைப்போல பல சிவகுமார்கள் வந்தால்
ஒருவேளை முடியும்.

.
நித்தியமுடன் நிஷ்டையிலும் நிற்கமாட்டார்
நிலத்திலுள்ள ஆசையெல்லாம் நினைத்து சொல்வார்
சத்தமுடன் தேவாரங் கூகை போலுஞ்
சதா நித்திய மோதிகுடி கெடுப்பாராண்டே...... (ஞானவெட்டி. 552)


திருவள்ளுவர் கற்பம்சாப்பிட்டது

கற்பமென்றா லற்ப மல்ல காயசித்தியாவ தற்கு
உற்பனமே யானரிந்து வுண்டேன் மதியமிர்தம்
தட்பரத் தாலென்சான் சரீரமதை ச் சுத்தி செய்து
முற்ப வ மோராண்டு சென்று முதல் தீட்ஷை பெற்றேனே (ஞானவெட்டி 828)

ஆக வள்ளுவன் காய கற்பம் சாப்பிட்டு அன்றும் இன்றும்என்றும் நிலைத்து நிற்கிறார்
என்று புரியும். சில விதண்டா வாதிகள் இப்போது வள்ளுவன் எங்கிருக்கிறார்
காட்டு என்பான். நாமென்ன வள்ளுவனைக்க் காட்டிலும் சக்தி பெற்றவரா ?அவரை
பிடித்து வந்து காட்ட. சில முட்டாள்கள் சைவசமய வள்ளுவனை வேண்டாமென
தமிழனைத் தாழ்த்த எண்ணி அவர் சமணரென்கிறார்.ஆயிரம் குறிப்புகள் உண்டு
வள்ளுவன் சைவம் என்று அடையாளம் சொல்லிடமுடியும். மடையர்கள் மட்டும் அவரை
சமணர் என்று ஏனோத் தள்ளிவிடப் பார்க்கிறார்கள். காரணம் அவர்சில உண்மைகளை
பட்டென உடைத்து சொல்லியிருக்கிறார். உதாரணம் கீழே.

வியாசர் சொல்லும் பாரதத்தில் வெகுபொய் வீனாம்
மேதினியோர் மாய்கையில் விரும்பச் சொன்னார்
ஆய்ந்து கவிபாடிவிட்டான் கம்பன் வம்பன்
அதீத இராமாயணத்தில் அநேகம் பொய்தான்.............
தொடுகவி மாணிக்க வாசகர் சொன்னாரே
தேவாரமான திருவாசகத்தை செகத்தொர்கள்
படித்து மெத்தயியங் கினார்கள்
எனன ஆண் டிகட்க்குப் பிழைப்பு க்காகப்
பேசிவைத்தார் மற்றொன்றும் பிசகோ யில்லை. ஞான வெட்டி 580

அல்லாகுதா வென்று ஐந்துகரம் வைத்துப் பணிந்
தில்லல்லா வெனத்துதி த்து வினிமுடி சாய்த்தே தொழுவர்
சொல்வார் உபதேசம் சூதர்களும் சூலைவைத்து
வெல்வார் ஞானபிரசங்கம் வெகு கிறிஸ்தவர் மனமே ..ஞானவெட்டி. 614.

வள்ளுவன் வியாசரை குற்றம் சொல்லுகிறான். அதேசமயம் 10 ஆம் நூற்றாண்டு
கம்பனைக் குறை காண்கிறான். ஏழாம் நூற்றாண்டில் ஏற்பட்ட முஸ்லிம் மதம் பற்றியும்
2000 வருடத்திற்கும் ஏற்பட்ட கிருத்துவம் பற்றியும் ஞான வெட்டி யானில் குறிப்பிடுகிறார்.
இதைக்கண்ட சிலர் வள்ளுவன் 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும் கம்பனுக்கு
பிற்பட்டவர் என்றும் வாதிடுகிறார். வள்ளுவன் முற்காலத்தி லேயே காய கற்பம் சாப்பிட்டு
நெடு நாளாய் வாழ்ந்து வரும் சைவசமய அகத்தியனின் தமிழ்ச்சீடன் என்பதை
உணர்ந்தால் இப்படிபபட்ட ஐயப்பாடுகள் எழாது.!!!




ஊத்தைக் குழிதனி னாதவிந் தூறி யுடலெடுத்தால்
மாற்ற மெண்சான் உடலவ் வழிக் கேமனநா டிடுங்காண்
சோற்றுத் துருத்தி யெரிகும்பி மாய்கை துலைத்திட்டோர்
காற்றும் வசப்படா ஞான சுகாதீதம் காண்கிலரே. (சித்தர் பாடல்)


ஊத்தைக்குழிவழி சென்றடைந்த விந்து நாதமுடன் கூடி உடலெடுத்ததால் அதன்
தொழிலை மறக்காது ஊத்தைகுழியையே மனித உடல் நாடுகிறது. பிறகது தின்ற
சோற்றை எரிக்க கும்பியாகவும் உயிர் காக்க மூச்சுக்காற்று துருத்தியாகவும் செயல்
படுகிறது. இப்படி உலக மாயையில் வாழ்க்கையை துலைத்தவர்கள் ஞான
சுகாதீதங்கள் பெறவேண்டி காற்றை வசப்படுத்தும் வழியை அறியமாட்டார்கள்.





ஞான வெட்டி நூலில் கண்டு படித்த காயகற்பம் பற்றியக். குறிப்புகள் என்னை
காயகற்பம் என்ன என்பதைத் தேட வைத்தது.
2003 இல் எனக்கொரு சீடன் , தற்போது AR இல் DSP, யாக பணி புரிகிறார். அவருக்கு
நல்ல முறையில் விளக்கினேன். சிலவற்றை சொல்லாது விடுத்தேன்.2003 இல் நான்
அவரை சந்தித்தபோது அவர் எஸ் ஐ ஆக இருந்தார் இன்று அவர் D.S.P. யாக இருக்கிறார்.
இப்போது அவர் காய கற்பத்தின் பொருள்களைத் தனியே தேட ஆரப்பித்து விட்டார்..
நான் 2005 june 1 அன்றுமதுரையில் superintedent / Dy commissioner ஆக பணி
புரிந்து ஓய்வு பெற்றேன். நான் செய்த ஆய் வுகள் முடிவடைந்தபோதும் தனி ஒரு ஆளாக
அவற்றை பரிசோதித்து செயல்முறையில் செய்து நிறைவேற்ற முடியவில்லை.
என்னுடைய ஆய்வுகள் நின்றுபோனது. நல்ல சீடர் கிடைக்க எல்லாம் வெற்றியாகும்.

சிவகுமார் அவர்களே நீங்கள் ஞான வெட்டிக்கு உரை எழுதியதாகக் குறிப்பிட்டிருந்தீர்.
கீழ்க் கண்ட வரிகளுக்கு நீங்கள் அளித்த விளக்கங்கள் என்ன என்பதை உங்களுக்கு
விருப்பம் இருந்தால் சொல்லுங்கள்.இல்லை என்றால் பதில் மட்டும் தெரிவிக்கவும்.


வள்ளுவர் சாதி :-- தான் வேதியர் குலத்தில் பிறந்ததாக தானே சொல்லியுள்ளார் .

வேதியர் குலத்தில் யானும் வந்துதி த்தளவை யெல்லாம்
சாதியென் பரைக்குள் வந்த சங்கடமெல்லாம் சொன்னேன்
சோதியானந்த ஞானச் சுழிமுனை நடனங் கண்டு
நாதவிந்து தித்த சூஷ் ச ரகசிய மிதாண்டே.......... ஞானவெட்டி. 896



இதைக் கழக கண்மணிகள் மற்றும் ஒன்றுக்கும் உதவா கட்சியினரும் கேட்டோ படித்
தறிந்து கொண்டார் என்றால் வள்ளுவனையும் தள்ளி வைப்பார்கள் .இப்போதுள்ள
தமிழர்கள் மிக மிக அறிவாவாளிகள் ஞானிகள் அல்ல ஞான சூன்யங்கள். பவணந்தி
முனி சொன்ன பழையன கழிதலும் புதியன புகுதலும் இதுதானோ. இவர்கள் தான்
ஜாதி பற்றிப் பேசித் தமிழரின் விஞ்சனத்தையும் அறிவையும் சோதிடம் வைத்தியம்
போன்ற பல அரிய கலைகளை வளர விடாமல் தடுத்து அழித்தார்கள். அதனால்தான் பொய் சித்தவைதியம் பொய் சோதிடர்கள் எல்லாம் வளர்ந்து உலாவி வருகிறார்கள்.
இவர்களைக் கூப்பிட்டு தமிழில் விஞ்சான நூல் இருக்கிறதா என்று கேளுங்கள் .
இல்லை என்பார்கள். வள்ளுவன் மாபெரும் சித்தன் விஞ்சானி மருத்துவன் உடலழியா
காய கற்பம் செய்தவன் தின்னவன் இன்னும் உயிரோடு வாழ்பவன்.இப்போதும் இரு
ஆனால், வள்ளுவன் இருந்தால் காட்டு என்பான். மிகப்பெரிய அறிவாளி.
வள்ளுவன் எழுதிய நூல்களை படித்தறிய மாட் டான் வள்ளுவன் 18 சித்தர்களுக்கு
குறைந்தவர் அல்ல. அவர் அகத்தியனின் நேர்முக சீடன். அதை அவர் நூல்களிலே
சொல்லி யுள்ளார். சித்தர் முறைகள் சில பகுத்தறிவு வாதிகளால் அழிந்து ஒழிந்தது.
அவர்கள்தான் ஐரோப்பிய முறைகளை ஆதரித்து சித்தர் நூல்களை படிக்கவிடாமல்
செய்தவர்கள்.



அனாதியாய் வெளியே நின்ற அரூபத்தை யறிந்த வாறும்
வினாடி யான் பிரியா வின்பம் விந்து நின்றுணர்ந்த வாறும்
பணாமுடி மயிர் பாலத்தில் பழம் பொருள் தெரிந்தவாரும்
கணவுபொல் கண்டகாட்சி கற்பத்தா லறிந்தே னாண்டே. ஞானவெட்டி 897
மயிற்பாலம் விளக்கம்

931 வது பாடலில்
காரமெனும் பூனீரு காயமதிலுமிருக்க
சாரமதைக் கொண்டு சவுக்காரமதைக் கட்டறியார்
பூரமென்றால் தாரமிது பூனீரதுவும் புளி காண்

பிருதிவி நகாரம் தாம் பிராணனும் காரமப்பு
இருத யந்திலி மிகுந்த இந்திரியமா மமுரி
அறியப்போமோ வெளி காணம்புவி யெங்கு முண்டு
சுருதி முடிவான சு டர் சூஷமறிந்தே முடிப்பர்.................ஞானவெட்டி 932

பூரச் சுன்னம் பூனீர் புளிநாதமாம்
வீரம் விந்து வெள்ளைக் கல்லுப்பதாம்
கார சாரங் கதிர் மதி ரெண்டினால்
தேறு சிவஞானப் பண்டிதரே

கண்டு களிகூர்ந்து குரு காரணத்தால் சித்திபெற
அண்டக்கல் லுப்பதனை யானே அறிந்தே னாதியுப்பால்
விண்டு விடும் ஞானவெட்டி மெய் ப்பொருளை யானுரைக்க
எண்டிசை நல்லோர்களிப் பொருளை காண்கில ரே ....ஞானவெட்டி. 977
அண்டக்கல்லுப்பு

சாகாக் கால் வேகாத்தலை போகாப் புனல் உண்மை விளக்கம்


மேலுள்ள பாடல்களின் விளக்கம்

தள்ளுவ தபினி கஞ்சாவெனு மது வைத்
தகர்த்து மேற் கரிவகை சுவையும
அள்ளுவ தினதான பசும்பயிரோடு பால்
மிகவும் பச்சரிசியுஞ் சமைத்து
எள்ளதோர் கரிய வேம்புட னமுரி
உப்பது மிளகுடன் தூளாய்ச்
சள்ளை யிலாம லொரு போதுண்ட
முது சாம்பனுட்கொண்ட திதுவே ............ ஞானவெட்டி. 864

அமுரி உப்பு விளக்கம்

கீழ் கண்ட பாடலின் விளக்கம்

உதகமென்ற முரி யுனதுள் நின்றிழகு
முவரச மூடி நீரித்து காண்
பதமெனும் புளியோன் றமுரி யாலுளதால்
பாகமாய்ப் பாண்டங் கொண்ட டக்கி
விதமிது பாகஞ் சமாதி வைத்திருந்த
மிகுந்த முப் பதுவயதண்டம்
சுதனருளாலும் பற்பஞ்செய் துணர ச்
சூட்சம சொல்லுவே னாண்டே. ........ஞான வெட்டி 866


தாங்களும் ஞானவெட்டி நூலுக்கு உரை எழுதியதால் ஆராய்ச்சி செய்திருப்பீர்கள்
என்ற நினைப்பில் உங்கள் முடிவு என்ன என்பதை தெரிந்துகொள்ள விருப்பம்.
சமீபத்தில் நான் திருக்குறள் எனும் சமய நூல் எழுதி வெளியிட்டுள்ளேன் அதை
உங்களுடைய பார்வைக்கு அனுப்புகிறேன்.

தங்கள் அன்புள்ள
பழனி ராஜன்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (ஒய்வு)

எழுதியவர் : பழனிராஜன் (3-Apr-20, 1:58 pm)
பார்வை : 224

சிறந்த கட்டுரைகள்

மேலே