உணர்வு

மனதில் புதைந்திருக்கும் வார்த்தைகள் ௭ல்லாம் தினமும் என் செவியில் ஒலிக்கிறதடி!!!
உன் நினைவால் என் விழியோரம் ஈரம் கசிந்தே காண்கின்றதடி!!
கைப்பிடித்து நெடுந்தூரம் உன்னுடன் செல்ல வேண்டும் என்றே நினைத்தேன்!!!
ஆனால் இன்று நெடுந்தூரம் செல்கிறேன் உன் நினைவுகளை மட்டும் நெஞ்சில் வைத்துக்கொண்டு!!
மேகங்களும் கண்கலங்குதடி உன் பிரிவை ஏற்கமறுத்து!!!
மலை காடுகளும் தலையாட்டி சிரிப்பதை விட்டு மௌனத்தில் மடிந்ததடி!!
தவிப்பின் வேதனையை உணரமுடியுமா உன்னால் ??
-சங்கவி ரவி

எழுதியவர் : சங்கவி ரவி (5-Apr-20, 12:42 pm)
சேர்த்தது : sangavi
Tanglish : unarvu
பார்வை : 411

மேலே