காதல்

கண்மூடிய மோன நிலையில் நான்,
அவள் என் இதயத் தாமரையாய்............
காதல் தெய்வமாய் என் இதயத்தில்.....
மோனம் கலைந்து கண் திறந்து பார்க்கையில்
மானிடன் என் கண் முன்னே அவள்
பேசும் தங்கப் புதுமையாய் காதல் சிலையாய்
மேலும் சொல்வதறியாது நான் சிலையென்றே எண்ணி
அவளை பார்க்கையில் ஓடி மறைந்தாள் அவள்
திரும்பிப் பார்க்கையில் இவை எல்லாம்
நிஜம்போல தோன்றும் என் கற்பனையே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Apr-20, 8:57 pm)
Tanglish : kaadhal
பார்வை : 215

மேலே