முழுமதி
கடல் கடந்திருந்த அவன் நலமறிந்து
என் துயர் தீர்க்க தூது வந்த தோழியே !!
என்னை முழுமையாய் அறிந்ததென்னவோ நீதான்
திங்களொருமுறை நின்னைக்கான ஆவலுடன் காத்திருந்தேன்
என்றுமே நீ பொய்த்ததில்லை !!
வெளிர் நிற ஆடைமறந்து இளஞ்சிவப்பு ஆடைஉடுத்திய அர்த்தம் தான் என்னவோ
உனக்கும் காதல் நோய் வந்துவிட்டதோ!!!