மழை வரும் அறிகுறி

அக்கா என்னவொரு அதிசயம் மழை வராமரி இருக்கே
வானம் இடிமுழக்கம் கொட்டுகிறது
கருமேகங்கள் சூழ்ந்து மழைக்காற்று வீசுகிறது
முதல் மழைத்துளி மண்ணில் விழும்முன் வீடுதிரும்பி ஆகவேனும்..
குஞ்சுகள் காத்துட்டு இருப்பாங்க !!

உங்களுக்கு தெரியுமா அக்கா
அவங்க பாக்க போற முதல் மழை இதுதான் !!
அவங்க மழைய பயமில்லாம ரசிக்க நான் கூட இருக்கனும் பாத்துக்கோங்க
என்று சிட்டுகள் சமிக்கை பரிமாறிக்கொள்கின்றன

புதருக்குள் என்னைக்கண்டு ஒளிந்து இருக்கும் பூச்சிகள், மழை வந்தா வெளில வந்துரும்ல! நான் காத்து இருக்கேன்,, நீ வேனா போடி என கொக்குகள் பேசிக்கொள்கின்றன

காகங்கள் தன்குடும்பத்துக்கு வீடுதிரும்ப எச்சரிக்கை செய்து கரைகின்றன

இன்னும் சில குருவிகளோ இந்த பக்கத்திற்கே இந்த ஒரு மாமரந்தான் பெருசு!!
மழைக்கு இங்கே ஒதுங்கிக்கொள்வோம் என்று முன்பதிவு செய்து கொள்கின்றன !!

அணில்களோ மதில் சுவரின்மேல் அங்குமிங்கு ஆரவாரமாய் துள்ளி குதிக்கின்றன

மாடுகளோ எஜமானன் வரப்போகிறான் என்றுணர்ந்து மேலோட்டமாய் மேய்கின்றன

ஒற்றை செம்பூதொன்று தன் துணையின் வருகைக்காக வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறது

பூக்களோ
கொஞ்சம் முன்னாடி வரக்கூடாதா
நான் வெயில்ல வாடிபோய்ட்டேன் பாரு என மழைக்காற்றுடன் செல்லச்சண்டை போட்டுகொண்டு இருக்கின்றன

குயில்களும் கிளிகளும் தங்கள் காதல் மொழிகளை பரிமாறிக்கொள்கின்றன


மண்வாசனை மனதை மயக்குகிறது
பூக்கள் சமாதான புன்நகைக்கிகின்றன
பறவைகள் காற்றை எதிர்க்க முடியாமல் உறைவிடம் தேடுகின்றன
இருள் மெல்ல மெல்ல சூழ்கின்றது !!!


மழைநீரும் மண்ணும் முத்தமிடும் சங்கீதத்தை காண மனது துடிக்கிறது !!
என்னென்று சொல்ல அப்பரவசத்தை
அனுபவிதால் மட்டுமே அடையமுடியும்!!

எழுதியவர் : கோப்பெருந்தேவி (9-Apr-20, 4:28 pm)
சேர்த்தது : கோப்பெருந்தேவி
பார்வை : 149

மேலே