இறைவன் படைப்பு
இறைவன் படைப்பு
இறை என்பது தனித்து நின்று
அனைத்தையும் படைத்ததுவோ!
இறை என்பது தானே
அனைத்துமாகி நிற்பதுவோ!
இறை என்பது தன் அறிவால்
உலகை செய்ததுவோ!
இறை என்பது நம் அறிவின்
உருவாய் நிற்பதுவோ!
இறை என்பது தம் மனம் போல்
நம்மைப் படைத்ததுவோ!
இறை என்பது நம் மனதின்
முழுமையில் மலர்ந்ததுவோ!
இறை என்பது தான் உணர்ந்து
பிரபஞ்சம் பிறப்பித்ததோ!
இறை என்பது நாம் உன்னத உணர்வாய் உணர்ந்ததுவோ!
இறை என்பது தம் சக்தியால்
அண்டம் உண்டாக்கியதோ!
இறை என்பது நம் கற்பனா
சக்தியில் விளைந்ததுவோ!
இறை என்பது அனுபவம்
நமக்குத் தருவதுவோ!
இறை என்பது நம்
அனுபவமாகி நிற்பதுவோ!
இறை என்பது இச்சகத்தினை
வனைந்து படைத்ததுவோ!
இறை என்பது அச்சத்தால் மனிதன் படைத்ததுவோ?
இறைவேறு படைப்புவேறு
என்று பிரித்து பேதம் பார்ப்பதோ?
இறைந்துகிடக்கும் படைப்புகளில் இறைகாணும் நிறை ஞானம்
இறைவன்என்று நமக்கு
வார்ப்பதோ?