பெண்ணே
எவ்வளவு நேரம் உனை
நினைத்துக்கொண்டிருப்பேன் என்பதனை
நீ கணக்கிடுவாயா?
எவ்வளவு நேரம் உனை நினைக்காமல் இருப்பேனோ
அதனை கழித்துவிடு..தெரிந்துவிடும்
நினைக்காமல் இருக்கும் நேரம்
கழிப்பதற்கு உனக்கு கிடைக்காமல் போகலாம்..
என் நினைவுகளை வானமாக்கி
உன் நினைவுகளை விண்மீன்களாய்
நிறுத்திவைத்தால்
இடைவெளிகள் இன்றி
என்வானம் மின்னிக்கொண்டே இருக்கும்..
Rafiq