கருடனின் மறுபிறவி

பரந்த வானில்
உயா்ந்தெழும் சிறகுகள்
துல்லியமான பார்வையில்
இரைத்தேடும் அலகுகள்
நெடுநாள் வாழ்வில்
சோதனைகளை விரட்டும்
உயா்ந்த எண்ணங்கள்
கொண்ட பறவையே…
வயது முதிர்ந்தநிலையில்
இரையை தேடும்
அலகுகள் வளைந்துவிடும்
உயா்ந்தெழ இலகுவான
சிறகுகள் தடித்துவிடும்
சிறிய இதயம்
தனிமையே தேடும்
நெடுநாளாக தனிமையில்
ஒதுங்கி வாழ்ந்து
வலியினை பொறுத்துகொண்டு
சினையை செதுக்கிக்கொண்டு
மீண்டும் மறுபிறவியெடுத்து
நடுவானில் வட்டமிடும்… ..

எழுதியவர் : வினோ பாரதி (21-Apr-20, 3:05 pm)
சேர்த்தது : வினோ பாரதி
பார்வை : 54

மேலே