தன்னம்பிக்கை

முடிந்தவரை ஏற்று கொண்டுதான்
ஆக வேண்டும்..
விதியை ஏற்று தான் வாழ
வேண்டும்..
முட்கள் குத்தி கிழிக்க
வலிகள் கொடியது ...
அதை ஏற்று தான்
பாதையை சுத்தம் செய்கிறோம்...
அன்பு வலிமையானது
இழப்புகள் கொடியது...
உணரும் போதுதான் தெரியும்..
தண்டனைகள் அவரவர்
தவறுகளின் வழியே..
இறப்பு அனைவருக்கும் சமம்..
முடிந்தவரை முடிந்ததை மறந்து
புது பாதைகள் அமைத்து
கொள்ளுங்கள்....

என்றும் இறந்த காலம்
நிகழ்காலமாகாது...
விடியல் உனகானது சமூகத்தை
கண்டு கொள்ளாதே
உன் பாதத்தில் நீ செல்..

எழுதியவர் : உமா மணி படைப்பு (21-Apr-20, 2:08 pm)
சேர்த்தது : உமா
Tanglish : thannambikkai
பார்வை : 231

மேலே