அச்சமில்லை பாரதி

அம்மா அம்மா யாரு வந்திருக்காங்கன்னு பாரும்மா .சந்தான பாரதியின் குரல் கேட்டு தாய் சுந்தரவள்ளி வேகமாக வெளியே வந்தாள் .ஹாலில் உட்கார்ந்திருந்த சுப்பிரமணியன் எங்க போற என்று கேட்டார் .என்னங்க பையன் சத்தம் போடுவது கேக்கலையா?
அட பைத்தியம்
அவனை தனிமைப்படுத்தி இருக்கிறோம்.
என்னங்க அவன் டாக்டருங்க
ஆமா ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு ராத்திரி பகலா சேவை செஞ்சிருக்கான் .
அவனுக்கா ?
என்ன பண்ண சொல்ற அந்த கிருமி யாருக்கு வேணாலும் வரும் தன் உயிரைப் பணயம் வச்சி சேவை செய்கிற எல்லா டாக்டர்களுக்கும் வரும். அது மாதிரி தான் உன் பையனுக்கு வந்திருக்கு கவலைப்படாதே !அவனுக்கு இப்ப காய்ச்சல் அதிகமா இருக்கு அதனால ஏதோ உலர்ரான்.
அம்மா அம்மா இங்க வாங்கம்மா யார் வந்து இருக்காங்க பாருங்க. வாசலில் இருந்து எட்டிப் பார்த்தார்கள்.
சந்தானபாரதி அதாவது டாக்டர் சந்தானபாரதி அதிகமான ஜுரத்தால் பேசிக்கொண்டிருந்தான் பாரதி பாரதி உன்னுடைய புத்தகத்தைப் படித்ததால் நான் மிகவும் தைரியமாக இருக்கிறேன் .அஞ்சி அஞ்சி சாவார் அஞ்சாத பொருளில்லை அவனியிலே என்று நீ சொன்னாய் ஆனால் என்று உலகமே கொரணா என்ற கிருமிக்கு அஞ்சுவது மட்டுமல்ல செத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் நீ இங்கே வந்து உட்கார்ந்து இருப்பது மகிழ்ச்சியை தருகிறது நீ சொல்வாயே துணிந்து நில் எதிர்த்து நில் .நாளெல்லாம் வினை செய் என்றெல்லாம் .
இதோ நானும் அப்படிதான் செய்து கொண்டு இருக்கிறேன் எனக்கு பயம் இனி இல்லை .ஏனெனில் முண்டாசு கவிஞன் முறுக்கிய மீசை கவிஞன் பாரதி நீயே என் முன் வந்து விட்டாயே!
தாயின் கண்களில் கண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது.
டாக்டர் சந்தானபாரதி கவிஞர் பாரதியுடன் பேசிக்கொண்டிருந்தார் தன்னையறியாமலே

எழுதியவர் : சு.இராமஜோதி (25-Apr-20, 4:57 pm)
சேர்த்தது : ராமஜோதி சு
பார்வை : 89

மேலே