கற்ற அறிவியல் தரவில்லை உற்ற மருந்து இன்னும்
தொற்று நோய்க்கிரு மியால்தினம்
இற்று வீழ்கிறது மனிதம்
கற்ற அறிவியல் தரவில்லை
உற்ற மருந்து இன்னும் !
புத்தியுள்ள சோம்பேறி யாய்முடங்க வைத்திட்டாய்
நித்தம் வழிபடும் ஆலயத்தின் வாசலையும்
மூடி முகமூடி யில்விலகிச் செல்லவைத்தாய்
எங்குதொலைத் தாய்கருணை யை ?
முறையே வஞ்சி விருத்தம்
இன்னிசை வெண்பா