காதல் சுமக்கும் கடிகாரங்கள்
எந்தப் பூவின் இதயம்
இனியும் உன்னையே
சொல்லக் கூடுமோ?
எந்தக் கடிதத்தின் உறை
இனியும் என்னையே
கடத்தத் தேடுமோ?
எத்திசை வரை
இணையும் நம் இமைதனை
உனக்கென வரையுமோ?
எந்தப் பாலைவனம்
மணற்பரப்பி நம்மையே
காதலென நிரப்புமோ???
////ஜெ.ப.செல்வம்////