பாவேந்தர் பாரதிதாசன்

புதியதோர் உலகம் செய்தாய்
புரட்சியாய்க் கவிதை தந்தாய்
விதிதனை என்றும் நம்பி
வீழ்ந்திடும் தமிழர் வாழ
மதிநிறை தமிழைச் சொன்னாய்
மதம்தனைக் கொண்டாய் இல்லை
சதிகளை எழுத்தால் வென்ற
சரித்திரக் கவியே வாழ்க !!!

எழுதியவர் : கவித்தலம் கை.அறிவழகன் (27-Apr-20, 11:16 pm)
பார்வை : 89

மேலே