359 பகலும் தூங்குவர் படிப்பிலா மூடர் – நெடுந்துயில் 2
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
தங்கரு மங்கள் செய்யத்
..தனிப்பகல் போதா தென்ன
இங்கறி வுடையோர் தூங்கார்
..இரவினு மூடர் துஞ்சக்
கங்குலும் போதா தென்னப்
..பகலுங்கண் படுவர் யாவும்
புங்கமாத் தேர்ந்து வேறோர்
..புரையிலார் போலு மாதோ. 2
- நெடுந்துயில்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”அறிவுடையோர் தங்கள் கடமையைச் செய்யப் பகல்பொழுது போதாதென்று இரவிலும் தூங்காது செய்வர்.
அறிவில்லாத மூடர் தூங்குவதற்கு இரவுப் பொழுதும் போதாதென்று பகலிலுந் தூங்குவர். சிறப்பாக அனைத்தையும் ஆராய்ந்து வேறு எந்த குற்றமும் இல்லாதவர் என்று இவர் தம்மைக் கருதுகின்றார் போலும்” என படிப்பில்லாத மூடரே பகலிலும் தூங்குவர் என்று இப்பாடலாசிரியர் தெரிவிக்கிறார்.
கருமம் - கடமை. கண்படுவர் - தூங்குவர்.
புங்கம் - சிறப்பு. தேர்ந்து - ஆய்ந்து. புரை - குற்றம்.