பாண்டில் ஒப்ப பகன்றை மலர

பாண்டில் ஒப்ப பகன்றை மலர


------------------------------------------------ருத்ரா


(ஓலைத்துடிப்புகள் ..25)





பாண்டில் ஒப்ப பகன்றை மலர


விரி பூ வான் பூ ஓர் சொல் உதிர்க்கும்.


அரவு அன்ன வீக்கொடி படர


முன்றில் ஆடு மைச்சிறை காக்கை


கரையும் பொழுதில் என் நெஞ்சு கிழிய


உமணர் மறுத்த சாகாட்டுப்பகடு


தும்பி தொடர நோன்றல் உகள


நெடிய கிடந்தாங்கு நீள் விழி புதைய


பிரிந்தனை என்னை எற்றுக்கு மன்னே ?


-----------------------------------------------------------------------
இது நான் எழுதிய சங்கநடைக்கவிதை.

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (9-May-20, 11:32 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 96

மேலே