இது ஒரு காதல் கவிதை

அடுக்கு மொழி பேசி உனன அனைக்க காத்திருக்க
ஆசையை தூண்டிவிட்டு எனன அடங்க சொல்பவளே

மடக்கி பிடித்திழுத்து மாட்டிக்கொண்டேன், உன்னிடத்தில்
தடுக்கி விழுந்த என்னை தடுக்க நினையாதே

முறுக்கு மீசை உடைந்தது உன் முந்தானை சேலைப்பட்டு -
கிறுக்குப்பய என்னை மடியில் கிடத்தித்தாலாட்டு

நின்மடியில் நான் பிள்ளை ஆறடியில் ஆண்பிள்ளை
கைபிடியின் இதயத்தில், காதல் கலவரத்தால் தவறில்லை

தண்டிக்க நீநினைத்தால் தண்டனையில் பயமில்லை- சற்று
கண்டித்து எனன கட்டிக்கொள் இரவென்பதால் நினைவில்லை....

கண்ணியம் இல்லைதான் என் கண்களுக்கு உன்முன்னே - ஏதும்
சொல்லியும் கேட்பதில்லை விட்டுவிடு, உனக்கு புண்ணியமாகுமடி

கலகம் செய்துவிட்டு அந்தக்கண்கள் சிரிக்குதடி-எனக்கினி
வழக்கம் போலதான் இந்த உலகம் இல்லையடி

இரவை இரவல் வாங்கி என் இடுக்கண் தனை களைய
அடுக்கு மொழி பேசி உனன அனைத்தாலும் தீராதடி

எழுதியவர் : மதனா (20-May-20, 12:53 pm)
சேர்த்தது : மதனா
பார்வை : 173

மேலே