பத்தாவது ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவது ஆண்டு நினைவஞ்சலி
****************************************
எங்களிக்காய் வாழ்ந்த அன்பான உறவே
எங்களோடு சேர்ந்து எளிமையாய் பயணித்த --சுடரே
எம்மை விட்டு பத்தாண்டு --நீ பிரிந்தாலும்
எங்கள் கண்களில் இருந்து இன்னும் மறையவில்லையடா
எண்ணிலா கனவோடு எங்களோடு வாழ்ந்தாய்
எங்களை நினைத்து நினைத்தே உருகினாய் --ஆனாலும்
அளவில்லா பற்று வைத்ததை இறைவனும் பொறுக்காமல்
உனக்கு புற்று நோயினை தந்து
உன்னை அவசரமாய் அழைத்தது ஏனென்று தெரியாமலே --கலங்கிறோம்டா
உன் நினைவுகள் நீண்டு சென்றாலும்
உந்தன் பாசத்தின் வாசம்
எங்கள் பூந்தோட்டத்தில் வாழ்ந்து கொண்டே இருக்குமடா

எழுதியவர் : Akilan raja (22-May-20, 11:41 am)
பார்வை : 195

மேலே