பசுமடி தேடும் பாலகன்...!

முலைப்பாலை ஊட்ட மறுக்கும்
எத்தனை தாய்மார்கள் மத்தியில்
உன் தாய்மைகை்கு நிகர் ஏது??

தாய்முலை அறியா பச்ச பாலகன்
உன்பால் முலையறிந்தது எப்போது

பசிதாங்காது பசித்தழும் வேளையில்
மார்பை மாராப்பால் மறைத்த வேளைதனில்
உன் பால்மணம் வீசியபோதா இந்த பாலகனுக்கு

இல்லை வறுமையின் பிடியில்
மார்பில் சுரக்கமறுக்கும் பாலின்மையறிந்து
தாயால் பழக்கப்பட்ட நற்பழக்கமோ இது??

இல்லை உன் குட்டி இறந்ததையறிந்து
உன் பால்மடி வலியதை நீக்க
கடவுளால் அனுப்பப்பட்ட தெய்வ குழைந்தையா ??

கோமாதா
இனிவரும் காலம் தாயை பறிகொடுக்கம்
எல்லா பிள்ளைகளுக்கும் உன்மடிதான் தஞ்சமோ??

எழுதியவர் : - ஜோ - (17-Sep-11, 2:54 pm)
சேர்த்தது : sahaana16
பார்வை : 318

மேலே