நிலவும் நானும்

வானில் எங்கேயோ வேகமாய்ப்
போய்க்கொண்டிருந்தது நிலவு
எங்கே போகின்றாய் நிலவே என்றேன்
கொஞ்சம் தூங்கிவிட்டேன் நான்
என்னைப் பார்க்க வந்த மேகம்
என்னைக் காணாது கோபத்தில் எங்கேயோ
போய்விட்டது அதைத் தேடி போகின்றேன் என்றது
நீ எங்கு போகிறாய் நண்பா என்று என்னைக் கேட்டது
உன்னைபோலதான் நானும் என்னைக் காண
வந்த என்னவள் என்னைக் காணாது போக
எங்கோ போய்விட்டாள் நிலவே அவளைத் ....தேடி
நான் போய்க்கொண்டிருக்கிறேன் .......
கொஞ்சம் வழிகாட்டுவாயா என்றேன் இந்த இரவில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-May-20, 8:48 pm)
Tanglish : nilavum naanum
பார்வை : 119

மேலே