அழகாய் கவர்தல்

சுகந்திப் பூக்களை
முளரிப்பூ பறித்தல் என்பது
தென்றலுக்கு விசிறிடும்
இலைகளின் நேசம் போன்றது...
மென்மையை மென்மை கொண்டே
அழகை அழகு கொண்டே
கவர்தல் தானே பேரழகு.!

#அஹமது_அலி

எழுதியவர் : அஹமது அலி (10-Jun-20, 12:41 pm)
சேர்த்தது : அஹமது அலி
பார்வை : 230

மேலே