காதல்

ஒரே ஒருமுறைதான் பார்த்தேனடி உன்னை
ஒருமுறைதான் அந்த உந்தன் புன்னகையும்
இன்றுவரை உன்னை மீண்டும் கண்டேனில்லேன்
நேரில்தான் நீ காணவில்லை என்று நினைக்கையில்
கண்முன் வந்து நிற்கின்றாய் 'நாத்தான் என்று'
தொட்டுவிட பார்க்கையிலோ காணாமல் போகின்றாய்
கண்மூடி தூங்க மனக்கண்முன் நீ
எந்தன் கனவுலகு நங்கையாய் அதே புன்னகைப்பூத்து
எந்தன் முன் இப்படி வெளியும் உள்ளுமாய்
என்னை ஆட்டிவைக்கின்றாயே காதலியே எப்போது
உள்ளும் புறமாய் தொட்டு உணர்வது நான் உன்னை
ஒரே பார்வையில் என்னுள் காதல் வளத்தவளே
நீயே சொல்வாய் இதற்கொரு பதில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Jun-20, 2:09 pm)
Tanglish : kaadhal
பார்வை : 81

மேலே