எங்க ஊரு மிட்டாய் தாத்தா
என்ன மிட்டாய் தாத்தா
காலையில எங்க கிளம்பிட்டீங்க...?
ஸ்கூல் தான் லீவாச்சே...
யாரு தம்பி...
நான்தான் தாத்தா குமரேசன்
குமரேசனா...
குமரேசா - நான் ஸ்கூலாண்ட போலப்பா..
கடை போட்டு 3- மாசத்துக்கு மேல ஆகுது...
என் பேர புள்ளைகள பார்த்தும் 3-மாசத்துக்கு மேல ஆகுது..
என்ன தாத்தா சொல்றீங்க..
நீங்க தனியாதான இருக்கீங்க..
உங்களுக்கு ஏது பேர புள்ளைக..?
எனக்குன்னு சொந்தம் இல்லப்பா..?
பேர புள்ளைகன்னு.. நான் சொல்றது..
கடைக்கு வர - ஸ்கூல் புள்ளைகளதா...
எனக்கு கடை வைக்க முடியலங்கிற கவலைய விட...
புள்ளைகளோட முகத்தை பார்க்க முடியலங்கிற கவலைதான் அதிகமா இருக்கு...
இந்த கட்டை கடை வைக்கிறனோ...
இல்லை...
கடைய வைக்காமலியே சாகறனோ... தெரியல...
அதெல்லாம்..
கடைய திரும்ப வைப்பீங்க தாத்தா
நிலைமை மாறும்...
அதுசரி -
நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவேயில்லையே ..
காலையில எங்க கிளம்பீட்டிங்க...?
அதுவா குமரேசா..
முதியோர் பணம் வாங்க போற...
நம்ம ஊர் எல்லையில இருக்கிற பழைய வாட்டர் டேங்கான்டா..
ஃபேங்க்-காரங்க வந்துருக்காங்க..
அங்க போயிட்டு வாங்கிட்டு வரனும்..
அவ்வளவு தூரமா.. தாத்தா
அது கிட்டதட்ட இரண்டு கிலோமீட்டர் இருக்குமே..
ஏன் தாத்தா..
இப்பதான் வீடு வீடா நேர போயி பணத்தை கொடுக்க சொல்லியிருக்காங்களே அரசாங்கம்.. நீங்க எல்லோரும் சேர்ந்து கேட்க வேண்டியதுதான..?
அதெல்லாம் கேட்டாச்சு குமரேசா..
உனக்கு காசு வேணும்னா.. வந்து வாங்கிட்டு போ பெருசு..
இல்லன்னா விட்டுட்டு போ பெரிசு..
அப்டின்னு சொல்றாங்க..
இந்த காலத்துல யாரு குமரேசா..
அடுத்தவங்க கஷ்டத்தை பார்க்கிறாங்க..
அடுத்தவங்க கஷ்டத்தை வேடிக்கைப் பார்த்துட்டு போறவங்கதான் அதிகம்..
சரி மிட்டாய் தாத்தா
நான் வேணும்னா..
வண்டியில கூட்டிட்டு வந்து விட்ற..
வேணாம் குமரேசா
நீ கேட்டதே போதும்
போற வழியில...வேற..
போலீஸ் இருப்பாங்க..
ஏன்டா வண்டி எடுத்துட்டு வந்தேன்னு..
உன் வண்டிய வேற வாங்கி வச்சிட்டாங்கன்னா..
உனக்கு கஷ்டமா போயிடும்..
அதுவும்..
வேலையே இல்லாத நேரத்துல , வண்டிக்கு வேற ஃபைன கட்டனும்....
அதனால வேணாம் குமரேசா..
நான் நடந்தே போறேன்...
சரி தாத்தா
காசு வாங்க எவ்வளவு நேரமாகும் தாத்தா..??
அதுவா குமரேசா மதியம் 12 மணியாகும் -
இல்லன்னா 1 மணியாகும்..
சில நேரத்துல சயங்காலம் 4 மணி கூட ஆகும்..
அப்டியா தாத்தா...
அவ்வளாே நேரமா..?
ஆமா குமரேசா..
அவ்ளோ நேரம்தான் ஆகும்..
ஏன் தாத்தா...?
அவ்வளவு நேரம்..
ஏன்னு கேட்டா..
சிஸ்டம் வேலை செய்யலன்னு சொல்லுவாங்க...
நெட்டு வெர்க் ஆகலன்னு சொல்லுவாங்க..
சரி தாத்தா
ஏதாச்சும் சாப்பிட்டிங்களா..?
இல்லப்பா...
ஏன் தாத்தா
சாப்பிடாம போறீங்க..
ஒரு நிமிஷம் வெயிட்பன்னுங்க சொல்லிட்டு குமரேசன் ஓடி போயிட்டு... ஒரு கை பையோடு திரும்ப வந்தான்...
இந்தாங்க தாத்தா..
என்ன குமரேசா இது..?
இல்லை தாத்தா..
அம்மா காலையிலியே டிபன் பன்னிட்டாங்க..
நீங்க வர லேட்டாகும்ன்னு சொல்றீங்க..
இந்தாங்க இத சாப்பிட வச்சுக்குங்க..
தண்ணியும் கூடவே வச்சுருக்க...
பராவயில்ல குமரேசா
நான் வந்து சாப்பிட்ற..
பராவயில்ல தாத்தா
வாங்கிகுங்க தாத்தா
வண்டியிலதா விட முடியல , சாப்பாடாவது வாங்கிகுங்க..
ரொம்ப நன்றி குமரேசா
நன்றியெல்லாம் வேண்டாம் தாத்தா
நான் சின்ன வயசுல
சிலநேரங்கள்ல காசு இல்லாமலியே
உங்ககிட்ட மிட்டாய் வாங்கி சாப்பிட்ருக்க
அதெல்லாம் மறக்க முடியுமா...?
நீங்க பத்திரமா போயிட்டு வாங்க தாத்தா, நேத்து முதுகுளத்தூர்ல மயக்கமான ஒருத்தர கவனிக்காம விட்டுடாங்க - நோய் இருக்குமோ அப்டிங்கிற அச்சத்திலியே , அவர் கிட்ட கூட யாரும் போகம.. அநியாயம அவரு இறந்துட்டாரு. நீங்க தயவுசெய்து எங்க வெளிய போனாலும் , குடிக்க தண்ணி, சாப்பாடு எடுத்துட்டு போங்க தாத்தா.. இது கொரோனா காலம்... மனிதநேயம் கூட வெளிவரப் பயப்படுது தாத்தா - நீங்க பத்திரமா போயிட்டு வாங்க.. ஏன்னா எங்க மிட்டாய் தாத்தா - எங்களுக்கு வேணும்... எங்க பிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுக்க...!!!
- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி