பொய்வேசம்

தேரொன்றில் ஏறிநின்றே
ஊரெங்கும் தூரென்று
கூறுபவன் நேர்நின்றே
சேறென்றுன் மேனியிலே
ஏனென்று பாரென்றே
கூர்வாளாய் கேட்பானின்
யாரிதைநீ கூறவென
போர்கொண்ட பார்வையிலே
பாம்பென்றே படமெடுத்து
சினங்கொண்டே சீறிவரும்
கார்படர்ந்த சிறுமையுள்ள
சீரில்லா சிந்தையிலே
வேர்கொண்ட பேருடையோர்
பாரினிலே வாழ்வரன்றோ!

எழுதியவர் : கார்த்திகேயன் திருநாவுக் (5-Jul-20, 5:04 pm)
பார்வை : 63

மேலே