கவலைகள் பறந்து போகட்டும்
மனிதனே...
வாழ்க்கையில்
கவலைகளை
சுமந்துகொண்டே
நடக்காதே...! !
சற்றே....கீழே
இறக்கி வை..! !
உடலும், உள்ளமும்
சற்று ஓய்வு
எடுக்கட்டும்...! !
கவலையில்லா
மனிதன்
யாருமில்லை..! !
ஆனால்...
சுழல்கின்ற
கால சக்கரம்
நிற்பதில்லை....! !
காலங்கள் மாறும்
கவலைகள் தீரும்...!
எனவே
உங்கள்
மன சிறையை
திறந்து விடுங்கள்
கவலைகள்
பறந்து போகட்டும்..! !
--கோவை சுபா