என்னுள் ஏனோ இத்தனை குழப்பங்கள்
என்னுள் ஏனோ இத்தனை குழப்பங்கள்!!
சில நேரங்களில் என் உணர்வுகளை உன்னிடம் சேர்த்துவிட துடிக்கிறேன்
அடுத்த தருணமே அவற்றை
எனக்குள் புதைத்து விட விழைகிறேன்
உனை நினைத்த நிமிடத்தில் வார்த்தைகளால் ஓவியங்கள் வரைகிறேன்
உனை பார்த்த நொடியில்
வரைந்ததை இதயம் தின்றடக் காண்கிறேன்
என்னுள் ஏனோ இத்தனை குழப்பங்கள்!!