அன்பே
இலைகள் உதிர்ந்துபோன என்
கிளைகள் காத்திருக்கின்றன..
இதயம் வறண்டுபோன என்
நதிகள் காத்திருக்கின்றன..
அசைதல் மறந்த எந்தன்
மலர்கள் காத்திருக்கின்றன..
ஒளிர்தல் இழந்த என்
இரவுகள் காத்திருக்கின்றன..
பறவையாய் நீ
நீருமாய் நீ
தென்றலாய் நீ
நிலவுமாய் நீ
வந்திடுவாய் அன்பே
வசந்தம் தர..
Rafiq