கருப்பு வெள்ளை அழகு
வைகறை வானத்தில்
வண்ணமய ஜாலத்தில்
வளைவாய் ஒரு பாலம்
வானவில்தானே!
நடைபயிலும் எனக்குள்
விடையறியா ஓர் வியப்பு
படைப்பின் அழகெல்லாம்
வண்ணங்களில்தானா?
பதில் தர வேண்டியே
பாலத்தின் ஊடினின்று
பறந்தே வருகுதே அது
பருந்துதானோ?
பகலையும் இரவையும்
நகலெடுத்ததாய் என்முன்
தேகம் கொண்டு நிற்குது
அழகின் அழகு!