உன் பிரிவில்தான் நான் உணர்ந்தேன் 555

என்னுயிரே...



கண்கள் சிந்தும்
கண்ணீரை துடைக்க...

சிலருக்கு மட்டுமே

கைகள் கிடைக்கிறது...

பலருக்கும்
என்னை போலவே...


பூமிக்கும் தலையணைக்கும்
மட்டுமே சொந்தமாகிறது...

நீ என்னை
பிரிந்த நாள் முதல்...

எனக்காக கண்ணீர் சிந்த
இந்த
பூமியில் யாரும் இல்லை...

எனக்காக யாரும் இல்லை
என்பது எவ்வளவு உண்மையோ...

என்னுடன் சேர்ந்து சிரிக்க யாரும்
இல்லை என்பதும் உண்மைதான்...

உன் பிரிவில்தான்
நான் உணர்ந்தேன்...

என் தனிமையையும்
என் கண்ணீரையும்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (22-Jul-20, 4:35 pm)
பார்வை : 1402

மேலே