ஆடை

உடல்தனையே மறைப்பதற்கும்

உரிமையிழந்த பெண்ணியமோ

உதிரமதை உதிர்த்து அன்றோ

உரிமையினை பெண்களுக்காய்

உலகமதில் பெற்றனரே...

நாடதுவும் வளர்ந்து வர

நன்னறிவும் பெருகி வர

ஆடைதனை குறைத்து இன்றோ

நாகரிக வளர்ப்பு....

அறைகுறை உடுப்பினிலே

அகிலமெங்கும் நடப்பு....

உடையுரிமை கிடைத்தும் இங்கே

உளம் உவகை கொள்ளலையே

நாகரிகம் மட்டும் இங்கே

நல் வளர்ச்சி கொள்கையிலே

நம்உடை அதுதான் குறைவதேனோ???

எழுதியவர் : சுவாதிகுணசேகரன் (26-Jul-20, 4:38 pm)
சேர்த்தது : சுவாதிகுணசேகரன்
Tanglish : adai
பார்வை : 67

மேலே