கவிஞர் இரா இரவியின் படைப்புலகம் நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா மோகன் நூல் விமர்சனம் செல்வி இர ஜெயப்பிரியங்கா

கவிஞர் இரா. இரவியின் படைப்புலகம்...

நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன்.
நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.


நூல் வெளியீடு : வானதி பதிப்பகம்
23, தீனதயாளு தெரு, தி.நகர்,; சென்னை—600 017
தொலைபேசி : 044 - 24342810. விலை:70 பக்கம் ;:104



கவிஞர் இரா. இரவி அய்யா அவர்கள் எனக்கு குரு. அய்யா தினமலர் நாளிதழில் 2015-ல் எழுதிய கவிதை எழுதுவோம் என்னும் கட்டுரையே முதன்முதலாக என்னை கவிதை எழுத ஊக்கப்படுத்தியது.

கவிஞர் இரா. இரவி அய்யா அவர்கள் மாமதுரைக் கவிஞர் பேரவை தொடங்கி சிற்றிதழ் கவிதை தொகுப்பு நூலென கவிதை உலகை எனக்கு அறிமுகம் செய்துவைத்தவர்.

கவிஞர் இரா. இரவியின் படைப்புலகம் என்னும் இந்நூல் அய்யா அவர்;களின் குருவான பேராசிரிpயர் இரா. மோகன் அவர்களால் எழுதப்பட்டது. இந்நூலில் அய்யா அவர்;களின் கவிதை நூலுக்கு போராசிரியர்; இரா. மோகன் தந்த 10 அணிந்துரைகளின் தொகுப்பு இடம் பெற்றுள்ளது. அணிந்துரை தருவதற்கு அசாத்தியமான பொறுமையும் வேண்டும். பரந்த மனமும் வேண்டும்.

பொழுதைப் பிறருக்கு வழங்க மறுப்போர்; நடுவே மோகன் அய்யா அவர்;கள் அடுத்தவருக்குத் தம் நேரத்தைச் செலவழிப்பதில் நெஞ்சம் நிறைந்தவர். கவிஞர். இரவி அய்யா அவர்;களின் கவிதைகளை வரிவரியாக ரசித்து பாராட்டி வாழ்த்தி மகிழ்ந்துள்ளார். அவரின் பேருள்ளம் இப்புத்தகத்தில் பளிச்சிடுகிறது. இரா. மோகன் அய்யாவின் அறிமுகம் எனக்கு கிடையாது. இருப்பினும் இளங்கலை தமிழ் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது உலகத் திருக்குறள் தேர்;வில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றதிற்காக மதுரையில் ஓர் இலக்கிய நிகழ்வில் பரிசு வழங்கினார்;கள். அவ்விலக்கிய நிகழ்வில் இரா. மோகன் அய்யாவும் சிறப்புரையாற்றினார்கள். அப்போது அய்யாவை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நூலின் இறுதியாக பின்னிணைப்பாக கவிஞர் இரா. இரவி அய்யாவின் சிறப்புகளையும் சாதனைகளையும் பேராசிரியர் பட்டியலிட்டுள்ளார்;.

இந்நூல் மறைந்தும் மறையாத தமிழ்தேனீ இரா மோகன் அய்யாவிற்கும் கவிஞர் இரா. இரவி அய்யாவிற்கும் இடையேயுள்ள நட்பையும் அன்பையும் வெளிபடுத்துகின்றது. கவிஞர் இரா. இரவி அய்யா அவர்கள் மதுரை விமான நிலையத்தில் உதவிச் சுற்றுலா அலுவலராக பணியாற்றிக் கொண்டே தம் இலக்கியபணியும் ஆற்றிவருகின்றார்;. அய்யா அவர்;களின் கவிதைசாரலில் தொடங்கிய கவிபயணம் இன்று இருபத்தி மூன்றாவது நூலான உதிராபூக்கள் மலர உள்ளது. சாதனைகள் பல படைத்து வரும் அய்யா அவர்களை வாழ்த்த வயதில்லை.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (30-Jul-20, 7:18 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 63

மேலே