பெண்ணென்று சொல்வேன்

கவிதைமணி தந்த தலைப்பு
" பெண்ணென்று சொல்வேன் "
கவிதைமணி நன்றி
○○○

அவளின் மேனி என்னோடு இல்லை
அதனால் எனக்கொரு

கவலை இல்லை; அவளின் மனதோ என்னோடு இருக்கிறது

அதனால் எனக்கொரு துக்கம் இல்லை
சுத்தமான பெண்ணென்று

சொல்வேன்; எனது ஆண்மையின் மீது அவளுக்கு மோகமில்லை;

எனது அந்தஸ்தின் மீது அவளுக்கிம்மி ஆசையில்லை; ஏழ்மை

மீது அவளுக்கொரு அவமானமில்லை எனில் பெண்ணென்று

சொல்வேன்; எனது தாழ்மையின் மீது அவளுக்கு அறுவறுப்

பில்லை எனது உள்ளத்தின் மீதவளின் விருப்பம் கொள்ளை

அதனால் மறக்கமுடியவில்லை அவளே
பெண்ணென்று சொல்வேன்

இதில் வேஷமோ தோஷமோ யில்லை
அவள் என்னிடமோ

நான் அவளிடமோ காதலை வினவவே யில்லை; இறைவன்

சேர்ப்பானோ மாட்டானோ தெரியாது
ஆனாலும் பெண்ணென்று

சொல்வேன்; சேரும் நாள் வரும்வரை பிரிவு வராது இருக்கட்டுமே

பாறைக்குள்ளும் தேரை நட்பின்றி ஒட்டு
உறவின்றி தனிமையில்

உயிர் வாழ்ந்து கொண்டுள்ளது போல் இருவருமே வாழ்ந்து

கொண்டு இருப்பதாலப்பூவை உரிமை பெண்ணென்று சொல்வேன்

ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (6-Aug-20, 5:19 pm)
Tanglish : pennenru solven
பார்வை : 66

மேலே