பெண்ணென்று சொல்வேன்
கவிதைமணி தந்த தலைப்பு
" பெண்ணென்று சொல்வேன் "
கவிதைமணி நன்றி
○○○
அவளின் மேனி என்னோடு இல்லை
அதனால் எனக்கொரு
கவலை இல்லை; அவளின் மனதோ என்னோடு இருக்கிறது
அதனால் எனக்கொரு துக்கம் இல்லை
சுத்தமான பெண்ணென்று
சொல்வேன்; எனது ஆண்மையின் மீது அவளுக்கு மோகமில்லை;
எனது அந்தஸ்தின் மீது அவளுக்கிம்மி ஆசையில்லை; ஏழ்மை
மீது அவளுக்கொரு அவமானமில்லை எனில் பெண்ணென்று
சொல்வேன்; எனது தாழ்மையின் மீது அவளுக்கு அறுவறுப்
பில்லை எனது உள்ளத்தின் மீதவளின் விருப்பம் கொள்ளை
அதனால் மறக்கமுடியவில்லை அவளே
பெண்ணென்று சொல்வேன்
இதில் வேஷமோ தோஷமோ யில்லை
அவள் என்னிடமோ
நான் அவளிடமோ காதலை வினவவே யில்லை; இறைவன்
சேர்ப்பானோ மாட்டானோ தெரியாது
ஆனாலும் பெண்ணென்று
சொல்வேன்; சேரும் நாள் வரும்வரை பிரிவு வராது இருக்கட்டுமே
பாறைக்குள்ளும் தேரை நட்பின்றி ஒட்டு
உறவின்றி தனிமையில்
உயிர் வாழ்ந்து கொண்டுள்ளது போல் இருவருமே வாழ்ந்து
கொண்டு இருப்பதாலப்பூவை உரிமை பெண்ணென்று சொல்வேன்
□
ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்