நினைத்திருப்பார்

முகம், உடல் அனைத்தையும்
மூடி, மறைத்து வந்தவர்கள்
கொள்ளையடிக்க வந்ததுபோல்
கொண்டு வந்ததை
குழியில் போட்டு விட்டு
சுற்றுமுற்றும் பார்த்த பின்பு
திரும்பிப் போகையிலே
எடுத்து வந்த ஒரு பொருளை மட்டும்
எங்கும் விட்டு விடாமல்
எடுத்து சென்றபோது தான்
தெரிந்தது –அவர்கள்
அடுத்தவர் பொருளுக்கு
ஆசை படாத நல்லவர்களென்று,
குழியில் வீசப்பட்டவர்
உயிரோடிருந்தால்
இப்படித்தான் நினைத்திருப்பார்

எழுதியவர் : கோ. கணபதி. (7-Aug-20, 9:01 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 43

மேலே