மதவாதத்தை எதிர்ப்போம்

கைகலப்பும் கலவரமும் கொள்கை யாகக் 
கருதுகின்ற கொடியமத வாதம் என்ற 
பொய்வளர்க்கும் சக்தியினைப் போற்று கின்ற 
புவனந்தான் திருந்தவொரு யுக்தி சொல்வேன்! 
செய்கைதனில் தெளிவேற்றி, மடத் தனத்தைத் 
தீக்கிரையாய்ச் செய்து விடுபட்டு நிற்போம்! 
செய்வதொன்றும் அறியாத வெற்றர் பேசும் 
சிறுபேச்சைக் கேட்காமல் மீள்வோம் இன்றே!           

எழுதியவர் : இமயவரம்பன் (12-Aug-20, 8:22 am)
பார்வை : 531

மேலே