ஒருமாலைக் கவிதையை மௌனமாய்

கலைந்தாடும் கூந்தலிழை
கன்னத்தை தழுவி உறவாட
கயலோடும் கண்களில்
வான்நீலம் திரை போட
இதழோடும் புன்னகையில்
செவ்வானம் மெல்லத் திறக்க
ஒருமாலைக் கவிதையை
மௌனமாய் நெஞ்சில் எழுதுகிறாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (14-Aug-20, 4:27 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 76

மேலே