ஒரு நாள் கொடுஇறைவா
தொடுபேசியை தொடாமல்
இணையத்தில் இணையாமல்
புலனத்தில் புதையாமல்
முகப்புத்தகத்தில் மூழ்காமல்
மின்னஞ்சலில் மிதக்காமல்
வலையொளியை வருத்தாமல்
கீச்சகத்தை சீண்டாமல்.
கூகுளை குலுக்காமல்
நிழற்படத்தை நிறைக்காமல்
காணொளியை காணாமல்
படவரியை படராமல்
தூதுவனை அழைக்காமல்
அருகலையை அரவணைக்காமல்
ஆலலை அருகிலில்லாமல்
மின்னூக்கியை சொருகாமல்
எச்செயலியும் இயக்காமல்
ஆழ்ந்த உறக்கம் தந்து
ஒரு நாள் கொடு இறைவா..
--------------------
சாம்.சரவணன்