உன்னை நினைத்து வாடுறேண்டி நான் 555

என்னுயிரே...
என் காதலை உன்னிடம் சொல்லி
உன்னை தொடர முடியாமலும்...
உன்னிடம் சொல்லாமல் எனக்குள்
மறைத்து கொள்ள தெரியாமலும்...
தவிக்கிறேனடி நான்...
உன்னை நேரில் பார்க்கும்
ஒவ்வொரு நிமிடமும்...
மனதுக்குள் புயல் ஒன்று
வந்து செல்லுதடி...
புயலுக்கு பின் வரும்
அமைதியை போல...
நீ என் வாழ்வில்
வந்தால்தானடி...
என் உள்ளம்
அமைதியடையும்...
சொல்லாத
என் காதலை...
இதோ உன்னிடம் சொல்ல
தெரியாமல் சொல்லிவிட்டேன்...
என்னுயிரே
சூறாவளியாக இல்லாமல்...
தென்றலாய் என்னை
தழுவி செல்லடி...
காத்திருக்கிறேன் நான்.....