அன்பிற்குள் அடங்கு - 2

விரைத்து, நீர்த்து , மண்ணோடு மக்கிப்போகும்
மானுடனின் மனதிற்குள் ஏன் இந்த குரூரம் !

ஆணவம் தலைக்கேறி ஆத்திரம் வெளிப்பட்டு
அநியாயவாதிகளின் கொலைவெறி தாக்குதலில்
வீழ்ந்து வேதனைப்படும் வெகுளி உள்ளங்கள் எத்தனை எத்தனை
யோசிப்பதற்குள் யுகங்கள் கடந்து விடும் !

அளவிடமுடியாத ஆற்றல் கொண்டு
அண்டம் தாண்டி எங்கும் நிறைந்திருக்கும்
இறைவனின் ரகசியமே அன்புதானே!

வாழ்ந்து முடித்த வாழ்வின் அடையாளங்கள்
வாயளவில் போகாமல்
வாழ்வியல் சாதனை ஆகவேண்டாமா !

ஆண்டவனாக ஏற்றுக்கொண்ட
ஆகச்சிறந்த மணிதெரெல்லாம்
அன்பைமட்டுமே போதித்தார்கள் என்பது பொய்யோ ?

உயிரிகளின் வரலாற்றில்
அன்பு மட்டுமே அனைத்தையும் உயிர்த்திருக்கிறது
என்பதை உணர்ந்து வாழ் மனிதா !

நெருங்கியவர்களை நேசி
எவரும் உனக்கு எதிரியல்ல
எல்லையில்லாத அன்பை எங்கும் நிலைநாட்டு-
ஆகமொத்தத்தில் அன்பிற்குள் அடங்கு !

எழுதியவர் : விநாயகமுருகன் (3-Sep-20, 8:32 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 238

மேலே