கோவில்
இறையின் இருப்பிடம்
ஒளியின் பிறப்பிடம்
ஆற்றலின் உறைவிடம்
வான் நோக்கி உயர்ந்த கோபுரம் நம்
சிந்தனை சீர் செய்திடும் ...!
பல எல்லைகளை கடந்தால் ...
கோவிலின் கருவறை தரிசனம் ...
நம் மனதின்
பல நிலைகளை கடந்தால் - நமக்குள்
இறையின் தரிசனம்... !!!