ஒரு ஃபன்டாசிக் காதல்
ஒரு ஃபன்டாசிக் காதல்
=====================================ருத்ரா
மெரீனா கடற்கரையில்
மணல் நண்டுகளோடு
உட்கார்ந்திருந்தேன்.
எப்போ வருவாள்?
நான் மனதுள் பேசியது
அந்த நண்டுக்கு கேட்டது.
இன்னுமா என்னைத்தெரியவில்லை?
கண்களைப்பார்த்து
வண்டுகள் வண்டுகள் என்றாயே.
உன் காலடியில்
நான் நண்டுகளாக இருப்பது
தெரியவில்லையா?
சரி தான்
காத்திருந்து காத்திருந்து
தூங்கி விட்டேன்.
கனவில்
விட்டலாச்சாரியா படத்திலும்
அவள்!
____________________________________________