அந்தணன் -- குலம்

அந்தணன் என்போன் யார்
வெறும் பிறப்பாலா....
இல்லை பிறப்பால் நல்வளர்ப்பால்
பிறப்பினால் இல்லாதபோதும் வளர்ப்பால்
அந்தணன் அவனே அறவோன் அறம்வளர்ப்பான்
எந்நாளும் எப்போதும் இது இறைவன் வாக்கு
இப்படித்தான் நம்மாழவார் தமிழில்
நமக்கு வேதசாரம் உணர்த்தி உயர்ந்த அந்தணர்
ரங்கன் போற்றி உயாத்திய அந்தணன் பாணன்
திருப்பாணன்.... நந்தியே விலகி சிவதரிசனம்
தந்த பெருமான் நந்தனார் ...
மனத்தால், சொல்லால், செயலால்
அறத்தோனாய் வாழ்பவன் அந்தணன்
வெறும் பிறப்பால் அன்று இறைவன் வாக்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Sep-20, 8:47 pm)
பார்வை : 49

மேலே